
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில், பார்வதி தேவியை வழிபாடு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர நாளில் பைரவரை நினைத்து வழிபட்டால், காரியத் தடைகள் விலகும். அன்றைய தினம் தயிர் சாதத்தை பைரவருக்கு நைவேத்தியமாக படைக்கலாம். இதனால் எதிரிகள் விலகுவர்.
சித்திரை மாத மூலம் நட்சத்திரத்தில், லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.
தாகம் என்று வருபவர்களுக்கு நீர் அளிப்பது, அடிப்படை தர்மம். அதுவும் சித்திரை மாதத்தில் இதுபோன்று நீர், மோர் தானம் செய்வது, நாம் பிறக்கும்போதே உடன் வந்த பாவங்களை விலகச் செய்யும்.
சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை அடுத்த திருதியையே, ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. அந்நாளில் தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தை வரவழைக்கும்.
சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில், வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு லட்சுமி வந்ததாக புராணங்கள் சொல்கின்றன. எனவே அன்றைய தினம் லட்சுமியை பூஜித்தால், செல்வச் செழிப்பு ஏற்படும்.
சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியில், அம்பிகை பிறந்ததாக ஐதீகம். எனவே அந்நாளில் புனித நதிகளில் நீராடுவது சிறப்பான பலனைத் தரும்.


