
ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் பாய்ந்து செல்லும், அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.
கடந்த மே 11ம் நாள் அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா கடற்கரை அருகே ‘ஏ.ஜி.எம் 183-ஏ’ என்ற ஒலி அலைகளை விட வேகமாக பாயக் கூடிய ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வான்வழி சோதனை வெற்றி பெற்றதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.
இதனால் உலகின் அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணை அமெரிக்காவிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒலி அலைகளைவிட ஐந்து மடங்கு வேகத்தில் சீறிப்பாய்ந்த ஹைபர்சோனிக் ஏவுகணை துல்லியமாக கடல் இலக்கை அடைந்ததாக லெப்டினன்ட் மைக்கேல் தகவல் வெளியிட்டுள்ளார்.


