
உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சியை பெறுவதற்கு அவல் பெரிதும் பங்குவகிக்கின்றது..
நீரிழிவு நோய் உள்ளவர்கள் பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்: அவல் – முக்கால் ஆழாக்கு காய்ந்த மிளகாய் – 2 தேங்காய்த் துருவல் – 3 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன் கடுகு – கால் ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 முந்திரிப் பருப்பு – 4 உடைத்தது
செய்முறை
வெங்காயத்தை சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாகத் தண்ணீரில் கழுவி , ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு சில மணி நேரம் ஊறவைக்கவும். பின் நீரை ஒட்ட வடித்து விட வேண்டும்.
பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் உடைத்த முந்திரி இவற்றைப் போட்டு வறுத்து பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்
அடுத்து ஊற வைத்த அவலையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
பின்னர் துருவிய தேங்காயையும் சேர்த்துக்கொள்ளவும் .
சுவையான அவல் உப்புமா ரெடி.
மறக்காம செய்து சாப்பிடுங்க


