
இயற்கையாக கிடைக்கும் தேனில் மிகச்சிறந்த மருத்துவ குணம் அடங்கியுள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும் ..தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது. ஆனால் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன் தான். சுத்தமான தேனில் 70 வகையான வைட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளன.
மலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனிலேயே அதிகமான மூலிகை மருத்துவ குணம் காணப்படுகின்றது.. இதனால் மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும்போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் கலந்து செயல்படத் தொடங்குகிறது..

தேன் சாப்பிடுவதன் பலன்கள் சில: தேனும்சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும், .தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும்.தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும், மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன்.
வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால் மூட்டுகள் வலிக்காது, தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும், தேன், முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம், தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும், இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும். இது போன்று பல நன்மைகள் தேனில் காணப்படுகிறது..அன்றாடம் சிறிதளவு தேனை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன..


