
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அடுத்து ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படையினரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்தில் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு 3நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நேட்டோ பொதுச்செயலாளரைச் ந்தித்து பேசினார். இது தொடர்பாக அவா் கூறுகையில், நேட்டோ வலுவானது மற்றும் ஒன்றுபட்டது, இந்த உச்சிமாநாட்டின் போது நாங்கள் எடுக்கும்நடவடிக்கைகள் மூலம், நாங்கள் எங்கள் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் போகிறோம். மேலும், போலந்தில் ஒரு நிரந்தர தலைமையகத்தை அமெரிக்கா அமைக்கஉள்ளது. இங்கிலாந்துக்கு கூடுதலாக 2 எப்-35 ரக போர் விமான அணிகளை அனுப்ப உள்ளது எனவும் கிழக்கு பகுதி முழுவதும் அமெரிக்க- நோட்டோ அமைப்பினை வலுப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.


