
உடல் எடை அதிகரிப்பு என்பது பலர் எதிர்நோக்கும் பிரச்சினை ஆகும் . இதனால் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. உடல் எடை அதிகரிப்பால் கணுக்கால் நரம்புகள், தசைகள் மற்றும் மூட்டுகள் அழுத்தப்படுவதால் ஏற்படும் வலி மற்றும் வீக்கமே ‘குதிவாதம்’ எனப்படுகிறது. நவீன காலத்தில் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடல் எடை அதிகரிப்பால் பல பெண்கள் சிரமப்படுகின்றனர். இதனால் சர்க்கரை நோய், கால் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதிக உடல் எடையால் ஏற்படும் கணுக்கால் மற்றும் குதிகால் பாதிப்புகளில் குதிவாதம், கீல்வாதம், தசைநாண் அழற்சி ஆகியவை முக்கியமானவை. உடல் எடை அதிகரிப்பால் கணுக்கால் நரம்புகள், தசைகள் மற்றும் மூட்டுகள் அழுத்தப்படுவதால் ஏற்படும் வலி மற்றும் வீக்கமே ‘குதிவாதம்’ எனப்படுகிறது. எலும்பு மற்றும் சதைப் பகுதியை இணைக்கும் திசுக்களில் ஏற்படும் அழுத்தத்தை ‘தசைநாண் அழற்சி’ என்று கூறுவார்கள்.

இந்த இரண்டு பாதிப்புகளும் ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது போதுமான ஓய்வு, நீண்ட நேரம் நிற்பதை குறைத்தல், தினமும் மூன்று அல்லது நான்கு முறை 15 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் கொடுத்தல், குதிகால் பகுதியை மேல்நோக்கி வைத்து ஓய்வெடுத்தல் போன்ற நிவாரண வழிகளைப் பின்பற்றலாம் அல்லது பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைக்கலாம். குதிகால் மற்றும் கணுக்கால் பகுதி நீரினுள் இருக்கும் பொழுது பாதத்தின் மேல்பகுதி வெளியே இருப்பது அவசியம்.


