deepamnews
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்காக இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்க தயார் என்கிறார்  ஜூலி சங்

அனைத்து கடன் வழங்குநர்களும் நியாயமானதும் சமமானதுமான நடவடிக்கைக்கு இணங்கும் போது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்காக, இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்க தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம் குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெரிஸ் கிளப்புடன் இணைந்து நிதியுதவி அல்லது கடன் நிவாரணத்தை வழங்க உறுதிபூண்டுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி ரணில் மாலைதீவுக்கு பயணம்.

videodeepam

இலங்கையில் குரங்கு அம்மை: இரண்டாவது நபர் அடையாளம்

videodeepam

அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களில் மாற்றம் – வர்த்தமானி வெளியீடு

videodeepam