75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகைகள் காரணமாக நேற்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட போக்குவரத்து திட்டம் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 5 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய, குறித்த காலப் பகுதியில் கொழும்பு, காலி முகத்திடலை மையமாகக் கொண்டு 20 வீதிகள் மூடப்படவுள்ளதுடன், மேலும் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.