deepamnews
சர்வதேசம்

பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து தீப்பிடித்ததில் 41 பேர் பலி – பாகிஸ்தானில் சம்பவம்

பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தானில் நேற்று  பேருந்து ஒன்று பாலமொன்றில் மோதி பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தனர்.

சிதைவுகளிலிருந்து 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அவற்றில் சில அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளன என்றும் மாவட்ட காவல்துறை அதிகாரி இஸ்ரார் உம்ரானி தெரிவித்துள்ளார்.

பலுசிஸ்தானின் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் சுமார் 48 பேருடன் சென்ற குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

குடியுரிமையை பெறுவதற்காக  அர்ஜென்டினாவுக்கு படையெடுக்கும் ரஷிய கர்ப்பிணிகள்

videodeepam

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு – மூவருக்கு வழங்கப்படுகிறது

videodeepam

விளாடிமிர் புட்டினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  பிடியாணை

videodeepam