deepamnews
இலங்கை

அதிகார பகிர்வு தொடர்பில் ரணில் குட்டிக்கரணம் அடித்து விட்டார் – எம்.ஏ. சுமந்திரன் தெரிவிப்பு

சமஷ்டி முறைமையிலான அதிகார பகிர்வு தொடர்பில் பிரசாரங்களை முன்னெடுத்த ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனதிபதியானவுடன் குட்டிக்கரணம் அடித்து விட்டார் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.  

ஜனாதிபதி தனது கொள்கை பிரகடன்  உரையில் தேசியப் பிரச்சினை தொடர்பில் முக்கியமாக எதனையும் குறிப்பிடவில்லை ஒருசில விடயங்களை மாத்திரம் தொட்டுச் சென்றுள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனும்,தானும் ஒன்றாக பாராளுமன்றத்திற்கு தெரிவானதாகவும்,பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.ஆனால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முறைமையை அவர் தெளிவாக குறிப்பிடவில்லை என்றார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்க உரை மீதான முதலாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இராணுவத்துடன் இடம்பெறும் காணி விடுவிப்பு தொடர்பான விடயங்களை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.1985 ஆம் ஆண்டு வரைபடத்திற்கு அமைய காணி விடுவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம்.தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.

Related posts

பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட முழு ஆதரவை வழங்குவோம் – உலக வங்கி

videodeepam

மன்னம்பிட்டி கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி.

videodeepam

ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை – பெப்ரல் அமைப்பு அறிவிப்பு

videodeepam