deepamnews
இலங்கை

தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு !

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தபால் மூலமானவாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான நிதி கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பை நடத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது. இருப்பினும் முன்னதாக திட்டமிட்டபடி நாளை தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற இன்றைய சந்திப்பின்போதே அரசியல் கட்சி செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

Related posts

தேசிய பேரவையில் கூட்டமைப்பு இணையாது –  சுமந்திரன் திட்டவட்டம்

videodeepam

பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி திட்டம்

videodeepam

இலங்கை முதலுதவி சங்க தொண்டர்கள் இன்று மதிப்பளிப்பு!

videodeepam