deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 37,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் சுமார் 37,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை 675,000 இற்கும் அதிகமான தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்கட்டை அடங்கிய பாதுகாப்பு பொதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 19ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதனிடையே, சுமார் 02 இலட்சம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர்

videodeepam

550 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை

videodeepam

இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் 13 ஆம் திகதி ஜனாதிபதி ரணிலை சந்திக்கிறது கூட்டமைப்பு

videodeepam