deepamnews
இலங்கை

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்திலிருந்து உயிர்பிழைத்தவர்களை பாதுகாப்பதில் பெரும் சவால் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

துருக்கி – சிரியாவில் நிலநடுக்கத்திலிருந்து உயிர்பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருக்க பாதுகாப்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி, சிரியாவில் நீர் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹன்ஸ் குளூஜ் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

தண்ணீர் மற்றும் சுகாதார அமைப்பில் கடும் சேதத்தை நிலநடுக்கம் ஏற்படுத்தி உள்ளது.இதனால் தொற்று நோய்கள், நீர்வழி நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் ஐரோப்பா சந்தித்துள்ள மாபெரும் இயற்கை பேரழிவு இந்த நிலநடுக்கம் என்றும் ஹான்ஸ் குளூஜ் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவிப்பு.

videodeepam

சதொச நிறுவனம் மேலும் மூன்று  பொருட்களின் விலைகள் குறிப்பு

videodeepam

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை – சீரற்ற காலநிலையால் யாழில் 221 குடும்பங்கள் பாதிப்பு

videodeepam