deepamnews
இலங்கை

தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

நிதி இன்மையால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை உறுதியளிக்கப்பட்ட வகையில், நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை  உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

தேர்தலை முன்னெடுக்க ஏனைய தரப்பினரிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லையென குறிப்பிட்டு இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

குறிப்பிட்ட திகதியில் தேர்தலை நடத்துவதாக உயர் நீதிமன்றில் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த நாட்களில் உறுதியளித்து.

உறுதிமொழியை நிறைவேற்ற முடியாமல் போனமையை சுட்டிக்காட்டி இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

Related posts

அடுத்த 5-10 வருடங்களில் இலங்கையில்  மாற்றத்தை ஏற்படுத்த இதுவே சிறந்த நேரம் –  குமார் சங்கக்கார

videodeepam

யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர் மயங்கி வீழ்ந்து பலி

videodeepam

நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய நிலைமாற்றத்துக்கான திட்டவரைபடம் – முன்வைத்தார் ஜனாதிபதி ரணில்

videodeepam