வேதன குறைப்பை மேற்கொண்டு அரச மருத்துவ அதிகாரிகளை சீண்டிப்பார்க்க வேண்டாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வாசன் ரட்னசிங்கம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தொடர்ந்து முறையாக செயற்படாதபட்சத்தில் பாரிய போராட்டத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.