deepamnews
சர்வதேசம்

பாகிஸ்தானில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுக்கு மாறாக தேர்தலை  நடத்த அந்நாட்டு ஜனாதிபதி தீர்மானம்

பாகிஸ்தானில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுக்கு மாறாக 2 மாகாணங்களில் தேர்தல் நடத்துவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஆரிஃப் அல்வி(Arif Alvi) தீர்மானித்துள்ளார்.

பாகிஸ்தான் தேர்தல்கள் ஆணைக்குழு அந்நாட்டு தேர்தலை பிற்போடும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அதனை கருத்திற்கொள்ளாமல் 2 மாகாணங்களில் தேர்தலை நடத்துவதற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல்கள் ஆணையாளருக்கு இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாற்சென்று ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

லண்டன் விமானத்தில் இளைஞரின் சடலம் மீட்பு

videodeepam

பெண்கள் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு தலிபான்களிடம் ஜி7 வலியுறுத்தல்

videodeepam

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு – மூவருக்கு வழங்கப்படுகிறது

videodeepam