deepamnews
இலங்கை

பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவி அளவுக்கு அதிகமாக போதை மாத்திரைகளை உட்கொண்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

பல்கலைக்கழக விடுதியில் உள்ள அறைக்குள் சுகவீனமடைந்த நிலையில் அவரது நண்பர்களால் பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (28)அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி இன்று (01) அதிகாலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் அவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.

Related posts

யாழில் பல இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மீன் சந்தையை திறப்பதில் சுகாதாரத் தரப்பினர் அசமந்தம்

videodeepam

காலிமுகத்திடலில் தடைவிதிக்க தீர்மானித்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் வஜிர அபேவர்த்தன

videodeepam

நாட்டை வழிநடத்த பசில் தகுதியானவர் – சாகர காரியவசம் தெரிவிப்பு

videodeepam