deepamnews
இலங்கை

அரச வங்கிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை

மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு அரச வங்கிகளின் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் தடையாக இருக்குமானால், தனியார் வங்கிகளில் வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும்  போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த முதலாம் திகதியன்று கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம்  எடுக்கப்பட்டதாகவும், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு  இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சின் அனுமதியுடன், மேற்குறித்த வங்கிக் கணக்குகள் தனியார் வங்கிகளில் ஆரம்பிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அரச வங்கிகள் ஊடான வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் செயற்படுத்தப்பட முடியாமல் போனால், கடன் உறுதிப் பத்திரம் உள்ளிட்ட அடிப்படை நடவடிக்கைகள்  அனைத்தும் மந்த கதியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும் என விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஆழமாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அரச வங்கிகளின் நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெற்று மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான  கடன் உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் போனால், நிதி அமைச்சின் அனுமதியுடன் அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுறவுகள், அரச நிறுவனங்கள் உள்ளிட்டவை  தனியார் நிறுவனங்களில் வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

4 குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை.

videodeepam

ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு

videodeepam

கொக்கு தொடுவாயில் மனித எலும்புக்கூடுகளுடன் துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகளும் மீட்பு!

videodeepam