deepamnews
இலங்கை

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தேர்தலை பிற்போடவில்லை என்கிறார் நாலக கொடஹேவா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தேர்தலை பிற்போடவில்லை என எதிர்க்கட்சிகளின் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது நாலக கொடஹேவா மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தில் பிணைமுறி விநியோகத்தில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை என அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் காரசாரமாக உரையாற்றி உண்மையை பொய் என நிரூபிக்க முயற்சித்து இறுதியில் தோல்வியடைந்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பிணைமுறி விநியோகத்தில் இருமுறை மோசடி இடம்பெற்றுள்ளது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உட்பட பல்வேறு குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு மத்திய வங்கி நிதி மோசடி ஒரு பிரதான காரணம் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறந்து விட்டார்.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை மாத்திரம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை. உலகில் அனைத்து நாடுகளும் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது.

பொருளாதார பாதிப்பு என்பதால் எந்த நாடும் தேர்தலை பிற்போடவில்லை.பூமியதிர்ச்சியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கியில் மூன்று மாத காலத்திற்குள் தேர்தலை நடத்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் நாட்டில் தேர்தல் என்பதொன்று கிடையாது,தேர்தல் அறிவிப்பு உத்தியோகப்பூர்வமானது அல்ல என குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் அரசியலமைப்பை சவாலுக்குட்படுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் இன்றுமுதல் மீண்டும் மழை நிலைமை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

videodeepam

பஸ் கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் – திரு.கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு

videodeepam

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம்.

videodeepam