எதிர்வரும் மார்ச் 19 அல்லது அதற்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து முக்கிய கட்சிகளும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
அதன்படி, எதிர்க்கட்சியின் அங்க வகிக்கும் அனைத்து, கட்சிகளினதும் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட சில நாடளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கையொப்பம் இட்டுள்ள கடிதமொன்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த கோரிக்கையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விடுத்துள்ளன.
சட்டப்படி தேர்தலை நடத்துவதற்கு இருந்த ஓரேயொரு தடையை உயர் நீதிமன்றம் இப்போது நீக்கியுள்ளதால், எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எனினும், இது சம்பந்தமாக திறைசேரி செயலாளருடனோ வேறு எவருடனுமோ நீங்கள் கலந்துரையாடத் தேவையில்லை” என அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி முன்னதாக, தேர்தலை நடத்கூடிய திகதியை தாமதமின்றி நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.