மின் கட்டணத்தை விகாரைகளுக்கான 500% அதிகரிப்பதே இந்த யுகத்தின் மிகப்பெரிய பாவம் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார் .
அதாவது மின் அமைச்சர் உள்ளிட்ட குழுவினரே இக்குற்றத்தைச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
விகாரைகள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு இந்திய உதவித் திட்டத்தின் கீழ் சோலார் பவர் செட் வழங்கப்படும் என்று தெரிவித்தபோதிலும், தற்போது நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து உதவி வசூலிப்பதாகவும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ் மோசடி இடம்பெறுவதாக சந்தேகிக்கப்படுவதாகவும், அதற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.