deepamnews
இலங்கை

மார்ச் 14 நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

உடனடியாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கான இயலுமை தங்களின் தொழிற்சங்கத்திற்கு உள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கி எதிர்வரும் 14 ஆம் திகதி அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த காலப்பகுதிக்குள் தங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டும் எனவும் ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதிநிதி இலங்கைக்கு வருகிறார்

videodeepam

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் எழுச்சி ஊர்திப் பவனி.

videodeepam

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

videodeepam