ரயில் கழிவறைக்குள் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இரவு 7.00 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில் சிசு கண்டெடுக்கப்பட்டதுடன், கொழும்பு – மட்டக்களப்பு புகையிரதத்தின் கழிவறையில் இருந்து குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.