deepamnews
இலங்கை

அஸ்கிரி மல்வத்து மகாநாயக்கர் ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அஸ்கிரி மல்வத்து மகாநாயக்கர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக அழுத்தத்தை ஜனாதிபதி நன்கு புரிந்துகொள்வார் என நம்பப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மக்கள் சார்பான கொள்கைகளை அமுல்படுத்த அரசாங்கம் உடனடியாக செயற்பட வேண்டுமென மகாநாயக்க தேரரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் தமது கடமைகளையும் பொறுப்புகளையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்காக கட்சி அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு தேசிய கோட்பாடுகளின் அடிப்படையில் நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்படுவதாக அஸ்கிரி மல்வத்து மகாநாயக்கர் சுட்டிக்காட்டுயுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை பொதுமக்கள் மத்தியில் சற்று கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழைய அனுமதி மறுப்பு

videodeepam

நிலக்கரி கொள்வனவிற்காக இம்மாதம் 20.2 பில்லியன் ரூபா தேவை

videodeepam

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

videodeepam