deepamnews
இலங்கை

கொழும்பு கோட்டைக்கும், மாலபேவுக்கும் இடையே இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிக்க ஆலோசனை

கொழும்பு கோட்டைக்கும், மாலபேவுக்கும் இடையே, இலகு ரக தொடரூந்து திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

அதற்கான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இந்த இலகு ரக தொடரூந்து திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர், இந்தத் திட்டம் 2020 இல் தொடங்கி 2024 நடுப்பகுதியில் நிறைவுறுத்த ஏற்பாடாகி இருந்தது.
இந்தத் திட்டத்திற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் வழங்குகிறது.

அதற்காக ஜப்பான் அரசாங்கம் ஆயிரத்து 850 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது.

Related posts

ரணில் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களது வழக்கு இன்று

videodeepam

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 932 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியாகின்றன – சுற்றாடல் அமைச்சு

videodeepam

பாடசாலை மாணவி மற்றும் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்ப்பு

videodeepam