deepamnews
இலங்கை

சிவனொளிபாத மலையடிவாரத்தில் லிஸ்டீரியா நோயால் பெண் ஒருவர்  உயிரிழப்பு

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா (Listeria) நோயால் உயிரிழந்தமை சுகாதாரத்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் லிஸ்டீரியா நோயால் பீடிக்கப்பட்டு, நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, அவருக்கு லிஸ்டீரியா நோய் தொற்றியுள்ளமை, ஆரம்ப பரிசோதனைகளில் உறுதியானதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்ததாக, சமூக வலைதளங்களில் வெளியான தகவலை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தவில்லை என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ முன்னதாக தெரிவித்திருந்தார்.

சிவனொளிபாதமலை வனப்பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவரும், யாத்திரையில் ஈடுபட்டிருந்த சிறுமி ஒருவரும், வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்ததாக குறித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“மியான்மரில் வாழ முடியாது” யாழில் கரையொதுங்கிய அகதிகள் கோரிக்கை

videodeepam

யாழில் மீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்த வர்த்தகர்

videodeepam

இலங்கையர்கள் உள்ளிட்ட 27 சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரோமானிய எல்லையில் கைது

videodeepam