deepamnews
இலங்கை

கடனாக பெற்ற ஒரு கோடி ரூபாவினை வழங்க மறுத்த பெண் – முதியவர் உயிர்மாய்ப்பு.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் காணி வாங்குவதற்காக தனது தந்தைக்கு பணம் அனுப்பியுள்ளார்.
அப்பணத்தில் ஒரு கோடி ரூபாயை குறித்த நபர் பெண் ஒருவருக்கு கடனாக வழங்கியுள்ளார். ஆனால் அந்த பெண் பணத்தை வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில் இரண்டு முறை அதிக மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதன் பிறகு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். மூன்றாவது முறையாக கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவேளை மீனவர்களின் உதவியில் காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த சம்பவங்கள் ஒரு மாதத்திற்குள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் நேற்று அதிகாலை பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீமூட்டிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related posts

அதிகாரத்தைக் கைப்பற்ற இன குரோதத்தை தூண்டியது மொட்டு – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

videodeepam

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் சென்ற பஸ் விபத்து .

videodeepam

தனியார் துறைக்கும் சம்பள அதிகரிப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜித் ஹேரத் கோரிக்கை

videodeepam