deepamnews
இலங்கை

நெடுங்குடியிருப்பொன்றில் ஏற்பட்ட மண்சரிவில் பலர் பாதிப்பு – பொது மக்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை

பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட மண்சரிவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், தொடர்ச்சியான மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,  பதுளை, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிப்போரை அவதானத்துடன் செயற்படுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது.

அதற்கமைய, மண்சரிவு, கற்பாறை சரிதல், மண்மேடு சரிதல், நிலத்தில் வெடிப்பு ஏற்படுதல் உள்ளிட்டவை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பமான கண்காட்சி

videodeepam

இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை நடாத்தப்பட வேண்டும் – செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தல்

videodeepam

இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் பரிசு அறிவிப்பு

videodeepam