deepamnews
சினிமா

பிரபல பலகுரல் கலைஞர் கோவை குணா உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

தமிழகத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாக இருந்த பலகுரல் கலைஞர் கோவை குணா உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

பலகுரல் கலைஞர் கோவை குணா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாரடைப்பால் நேற்று காலமானார்.

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் ஊடாக தனித்துவமான திறமைகளால் பிரபலமடைந்தவர் கோவை குணா. தனது தனித்துவ உடல்மொழியால் ரசிகர்களை ஈர்த்தவர். இவர் ‘சென்னை காதல்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியில் முதன்மை போட்டியாளராக வெற்றிபெற்ற இவர், ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலை பிரதி செய்வதில் புகழ்பெற்றவர்.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த விநாயகபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரகங்கள் செயல் இழந்த நிலையில் கடந்த ஓராண்டாக கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சையின் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்.

Related posts

50 வினாடி விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா??

videodeepam

தன் காதலியான கீர்த்தி பாண்டியனை இன்று திருமணம் செய்து கொண்டார் நடிகர் அசோக் செல்வன்.

videodeepam

விஜய் மகன் ஆசை மறுக்கப்பட்டது ஏன்?

videodeepam