தேர்தலுடன் தொடர்புடையதாக 200 மில்லியன் ரூபா பெறுமதியான பணிகள் நிறைவுறுத்தப்பட்டுள்ள போதிலும், இதுவரை 40 மில்லியன் ரூபா நிதி மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குசீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளுக்கும் அரச அச்சக திணைக்களத்திற்கு 533 மில்லியன் ரூபா தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தேர்தலுக்கான ஒரு கோடியே 87 இலட்ச வாக்குசீட்டுக்களில் இதுவரை 3 இலட்சம் வாக்குசீட்டுக்களே அச்சிடப்பட்டுள்ளன.
அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நிதியை பெற்றுக்கொள்ளும் நோக்கில், திறைசேரியின் செயலாளருக்கு அரச அச்சகமா அதிபரினால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.