deepamnews
இலங்கை

தேர்தலுக்காக இதுவரை கிடைக்கப்பெற்ற நிதி – அரச அச்சகம் அறிவிப்பு

தேர்தலுடன் தொடர்புடையதாக 200 மில்லியன் ரூபா பெறுமதியான பணிகள் நிறைவுறுத்தப்பட்டுள்ள போதிலும், இதுவரை 40 மில்லியன் ரூபா நிதி மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குசீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளுக்கும் அரச அச்சக திணைக்களத்திற்கு 533 மில்லியன் ரூபா தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தேர்தலுக்கான ஒரு கோடியே 87 இலட்ச வாக்குசீட்டுக்களில் இதுவரை 3 இலட்சம் வாக்குசீட்டுக்களே அச்சிடப்பட்டுள்ளன.

அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நிதியை பெற்றுக்கொள்ளும் நோக்கில், திறைசேரியின் செயலாளருக்கு அரச அச்சகமா அதிபரினால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாண் , சீமெண்ட், பால் மா ஆகியவற்றின் விலையை தீர்மானிக்க நுகர்வோர் அதிகாரசபை தலையிடும் – நுகர்வோர் அதிகாரசபை

videodeepam

வடக்கில் விகாரை அமைப்பதற்கு குறுக்கே நிற்கிறது கூட்டமைப்பு- விமல் வீரவன்ச ஆவேசம்

videodeepam

எரிபொருள் பவுசர், முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி

videodeepam