deepamnews
இலங்கை

வடமாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக வடக்கு ஆளுநர் ஜனாதிபதியால் நியமனம்

வட மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணை தலைவராக வடமாகாண ஆளுநர் ஜீவன்  தியாகராஜா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே வட மாகாணத்தில் உள்ள மன்னார் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக  அமைச்சர் காதர் மஸ்தான்  யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வவுனியா மாவட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் திலீபனும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள  மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்களை ஒருங்கிணைக்கும் வகையில் இணைத் தலைவராக  வடக்கு ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

06ஆம் தரத்திற்கான அனுமதி பதிவுகளை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான வசதி

videodeepam

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்

videodeepam

தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸார் மீது தாக்குதல்

videodeepam