deepamnews
இலங்கை

அதிக விலைக்கு பொருட்களை விற்கும் கடைகளை கண்டுபிடிக்க விசேட சுற்றிவளைப்பு

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு பயனளிக்காமல் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டுபிடிக்க விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால், உயர்த்தப்பட்ட பெரும்பாலான பொருட்களின் விலைகள் தற்போது குறைந்துள்ளன.

ஆனால் பல கடை உரிமையாளர்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக அதிகாரசபைக்கு புகார்கள் வந்துள்ளன.

எனவே, நாடளாவிய ரீதியில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தேடி விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.

Related posts

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம் –  பரீட்சைகள் திணைக்களம்  அறிவிப்பு

videodeepam

கோட்டபாயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டது போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் – சிறிதரன் தெரிவிப்பு

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மீளாய்விற்கு தயார் – அரசாங்கம் அறிவிப்பு.

videodeepam