deepamnews
இலங்கை

பெற்றோலிய கூட்டுத்தாபன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டவர்களை சந்தித்த  மஹிந்த ராஜபக்ஷ

 எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க தலைவர்கள் உட்பட இருபது பேரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.

விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது

இதேவேளை, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பெற்றோலிய தொழிற்சங்க தலைவர்கள் ஐவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கலந்துரையாடல் ஒன்றையும் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தொழிற்சங்க தலைவர்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரிடம் வினவியபோது ஹிரு நியூஸ் தெரிவித்துள்ளது.

Related posts

அம்பாந்தோட்டை கடற்பரப்பில் நில நடுக்கம் !

videodeepam

மார்ச் 14 நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

videodeepam

பொலிஸாரால் சட்டவிரோத நீர் தாரை,  கண்ணீர் புகை பிரயோகம் – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்

videodeepam