இலங்கையை வழிநடத்துவதற்கு பசில் ராஜபக்ச மிகவும் பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதுச் செயலாளர் பசில் ராஜபக்ஷ தலைமைத்துவத் திறனை வெளிப்படுத்திய தலைவர் எனவும், யுத்தத்தின் போது சர்வதேச சமூகத்தை மிக சிறப்பாக கையாண்டு சர்வதேச ஆதரவு பெற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
இந்த நாட்டின் வறிய மக்களை முன்னேற்றுவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து, உலகின் அதிவேக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக மாற்றுவதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்சவின் பணி போற்றத்தக்கது என சாகர காரியவசம் தெரிவித்தார்.