deepamnews
இலங்கை

50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் இருந்த சில பணம் காணாமல் போயுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு மத்திய வங்கியின் அதிகாரிகள் பலர் நேற்று (11) பிற்பகல் வந்துள்ளதாகவும், மேலும் சரிபார்த்து பின்னர் வருவோம் என பொலிஸில் இருந்து திரும்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் வங்கியின் பாதுகாப்பு தரப்பினரும் கோட்டை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மத்திய வங்கி வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Related posts

டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் குறையாது – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் நாட்டிற்கு வருகை.

videodeepam

ஐக்கிய மக்கள் சக்தி தனிநபர் சொத்தல்ல – கட்சியில் இருந்து வெளியேறமாட்டேன் என்று பொன்சேகா தெரிவிப்பு.

videodeepam