கடந்த 24 மணித்தியாலங்களில் விபத்துக்குள்ளான 185 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
55 பேர் வீதி விபத்துக்களில் சிக்கியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோதல்கள் காரணமாக 44 பேரும், வீட்டு விபத்துக்கள் காரணமாக 36 பேரும், பட்டாசு விபத்துக்கள் காரணமாக 07 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.