deepamnews
இலங்கை

சாவல்கட்டில் கத்தி வெட்டு தாக்குதல் – மூவர் வைத்தியசாலையில்

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டு பகுதியில் இடம்பெற்ற தகராறில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்குள் நேற்றையதினம் இடம்பெற்ற தகராறின் போது கத்தி வெட்டுக்கு உள்ளாகி மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை – வெடித்தது சங்கானையில் போராட்டம்!

videodeepam

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐவர் கைது.

videodeepam

3 நாட்களுக்கு எரிபொருள் இல்லை..?

videodeepam