deepamnews
இலங்கை

புத்தாண்டு சைக்கிள் ஓட்டம் வெற்றியாளருக்கு சைக்கிள் வழங்கிய ஆளுநர்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சைக்கிள் ஓட்ட போட்டியில் நவாலியைச் சேர்ந்த பாலசிங்கம் கிருஷ்ணா முதல் இடத்தை பெற்றார்.

வட மாகாண ஆளுநர் செயலகம் யாழ். மாவட்ட செயலகம் 51 வது காலால் படைப்பிரிவு ஆகிய இணைந்து ஏற்பாடு செய்த சித்திரை புத்தாண்டு சைக்கிள் ஓட்ட நிகழ்விலே முதல் இடத்தை பெற்றார்.

அவருக்கான துவிச்சக்கர வண்டியினை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கி வைத்ததோடு லுமாலா சைக்கிள் நிறுவனம் குறித்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒக்டோபர் 25 ஆம் திகதி இலங்கை வரும் சீன ஆய்வுக் கப்பல்.

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு!

videodeepam