deepamnews
இலங்கை

சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து மீது கல் வீசி தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது இன்று (25) அதிகாலை செல்வபுரம் பகுதியில் கல்வீச்சு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

உந்துருளியில் வந்த இருவர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு சாலையில் இருந்து செல்லும் அனைத்து அரச பேருந்துக்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

எவருக்கும் 50 வீத வாக்குப்பலம் இல்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

videodeepam

படகு மூலம் இந்தியா சென்று தமிழ்நாட்டு முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடவுள்ள யாழ்ப்பாண மீனவர்கள்!

videodeepam

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக பசிலும் நாமலும்  முன்மொழிவு

videodeepam