deepamnews
இலங்கை

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற அருந்ததி மாற்று மோதிரம் மணப்பெண் அலங்காரம்.

நேற்றையதினம் அருந்ததி மாற்று மோதிரம் ஏற்பாட்டில் மணப்பெண் அலங்கார கண்காட்சி நிகழ்வு யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

இந்த நிகழ்வானது நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதன்போது மணப்பெண் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

அருந்ததி மாற்று மோதிர ஏற்பாட்டு குழுவின் தலைவர் திரு. கருணாகரன் அவர்களது தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு 10வருடமாக யாழில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனவிரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், இராணுவ பெண்கள் அணியினர், அழகிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – எரிசக்தி அமைச்சர்

videodeepam

கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான 11 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்படும் – போக்குவரத்து அமைச்சு

videodeepam

5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின –  யாழ். மாவட்ட வெட்டுப்புள்ளி 143

videodeepam