deepamnews
இலங்கை

தொடரும் சீரற்ற வானிலை – மூன்று மாவட்டங்ளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் மூன்று மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் பசறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவிற்கும், மாத்தறை மாவட்டத்தின் கட்டபொல, பஸ்கொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைய 24 மணித்தியாலங்களில் அதிகூடிய 135 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

Related posts

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராகிறார் மஞ்சுள பெர்னாண்டோ – அரசியலமைப்பு பேரவை அனுமதி.

videodeepam

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

videodeepam

அத்தியாவசிய மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

videodeepam