deepamnews
இலங்கை

காய்ச்சல் இருந்தால் உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்யவும் – தாமதமடைந்தால் உயிராபத்து

நாட்டில் மூன்று வகையான டெங்கு வைரஸ் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருவருக்கு இரண்டு நாட்கள் காய்ச்சல் இருந்தால் டெங்கு பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி கருத்து வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின்படி, மூன்று டெங்கு வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே காய்ச்சல் வந்தால், இரண்டாவது நாளில் கண்டிப்பாக இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் டெங்கு நோயாளிகள் மருத்துவமனைக்கு தாமதமாக வரும்போது உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய வானிலையில் ஏற்படபோகும் மாற்றம்.

videodeepam

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு நந்திக்கடலில் அஞ்சலி

videodeepam

கோட்டாபயவின் பாதையில் செல்லும் தற்போதைய அரசாங்கம் –  சம்பிக்க குற்றச்சாட்டு

videodeepam