ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பு நாடுகள் கடனால் சுமையாக உள்ள நாடுகளுக்கு பயனுள்ள கடன் நிவாரணப் பொதியை வழங்க ஒப்புக்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான திரு. அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
வங்கியின் 56வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இம் மாநாடு இந்த ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்றது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக வங்கியின் புதிய தலைவராக அஜய் பங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.