deepamnews
இலங்கை

சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9,000க்கும் அதிகமானோர் பாதிப்பு !!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய நிலை அறிக்கை தெரிவிக்கிறது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளையில் மழை மற்றும் பலத்த காற்றினால் 2,249 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் வெள்ளத்தினால் 2,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 71 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மூன்று வீடுகள் இடிந்துள்ளதுடன் 82 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Related posts

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு – சாதகமான ஒரு தீர்மானத்தை அறிவிக்கவுள்ள சீனா

videodeepam

சிறுவர் இருதய சிகிச்சை பிரிவின் பல சேவைகள் இடைநிறுத்தம்!

videodeepam

நாட்டில் லிஸ்டீரியா பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு விளக்கம்

videodeepam