deepamnews
இலங்கை

ஐ.எம்.எப். ஒப்பந்தங்களை மிகவும் சிறந்ததாக மாற்ற முடியும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை இணைந்து செயற்படுவதன் மூலம் தற்போது ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தங்களை மிகவும் சிறந்ததாக மாற்ற முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு விஜயம் செய்துள்ளமை அதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு அமைய கடன் எல்லை அதிகரிக்கும் செயற்பாடு இடம்பெறவில்லை எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாட்டின் மூலம் அரசாங்க திறைசேரி உண்டியல் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய 5 ஆயிரம் பில்லியன் ரூபா என்ற கடன் எல்லையை 6 ஆயிரம் பில்லியன் ரூபாவாக மாத்திரமே அதிகரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும் – அரசாங்கம் உறுதி

videodeepam

எரிசக்தி இறக்குமதிக்கு வாரத்துக்கு 50 மில்லியன் டொலர்களே வழங்க முடியும் – மத்திய வங்கி

videodeepam

159வது வருட பொலிஸ் வீரர் தினம் கிளிநொச்சில் இடம்பெற்றது .

videodeepam