deepamnews
இலங்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்தால் ஆதரவை வழங்க தயார் – சஜித் பிரேமதாச

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தால் அதற்கு ஆதரவை வழங்க தயார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் சர்வகட்சி ஒன்றியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கம் தன் நிகழச்சி நிரலுக்கு ஏற்ப தேர்தலை நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அது ஜனநாயக ரீதியான செயற்பாடல்ல. என்றும் ஜனாதிபதியினதும் , அவருக்கு ஆதரவளிப்பவர்களதும் தேவைக்கேற்ப தேர்தலை நடத்த முயற்சிப்பது தவறாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தல் சவாலை ஏற்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். சகல எதிர்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு , தேசிய கொள்கையை கேந்திரமாகக் கொண்ட பயணத்துக்கு நாம் தயாராகவுள்ளோம்.

எனவே ஊடகங்கள் , சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகளை உருவாக்கிக் கொண்டிருக்காமல் நேரடியாக இது தொடர்பில் எம்முடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வரிக் கொள்கை மாற்றப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை -15 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

videodeepam

போதைப்பொருள் – பாதாள உலகக் குழுவை ஒழிக்க விசேட குழு!

videodeepam

திருகோணமலையில் விகாரை அமைப்பு – ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்,

videodeepam