deepamnews
இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு – பெண்கள் உட்பட 9 பேர் கைது

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை , அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டி விகாரையை அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த விகாரைக்கு சற்று தூரத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

அதன் போது அங்கு வந்திருந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், இவ்விடத்தில் சட்டவிரோதமான முறையில் கூட முடியாது. அதனால் இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுமாறு பணித்தனர்.

அதனை மீறி அங்கு நின்றவர்களை சட்டவிரோதமான முறையில் கூடி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேரை கைது செய்தனர்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனியார் காணி ஒன்றில் நின்றிருந்த வேளை அவரை வலுக்கட்டாயமாக தூக்கி அக்காணியில் இருந்து பொலிஸார் அப்புறப்படுத்தினர்.

ஒன்பது பேரையும் இன்று மாலை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

videodeepam

தொலைதூர பேருந்துகளில் இருக்கைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்

videodeepam

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை – இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

videodeepam