deepamnews
இந்தியா

தமிழக யாசகர் இலங்கைக்கு அளித்த இறுதி நன்கொடை

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நன்கொடை அளித்த தமிழக யாசகர் பூல்பாண்டியன் தமது கடைசி நன்கொடையை தமிழக முதலமைச்சர் நிதிக்கு வழங்கியுள்ளார்.

இதன்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அவர் 10 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.

தமிழக அரசின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது என்ற நடைமுறையை 75 வயதான பூல்பாண்டியன் வழக்கமாக கொண்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் பூல்பாணடியன் 50 லட்சம் ரூபாயை தமிழக அரசுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், தமக்கு வயதாகிவிட்டதால் யாசகம் செய்வதை விடுத்து, கோயில்களுக்கு செல்வதன் மூலம், வாழ்க்கையை செலவிட திட்டமிட்டுள்ளதாக பூல்பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மதுரை ஆட்சியர், பூல்பாண்டியனுக்கு சுதந்திர தினத்தின் போது ‘சமூக சேவகர் விருது’ வழங்கிக் கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

யோகா நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்

videodeepam

சென்னை விழா ஏப்ரல் 29 முதல் மே 14 வரை – 1.50 கோடி ரூபாய் செலவில் ஏற்பாடு

videodeepam

சகல கட்சிகளினதும் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அழைப்பு

videodeepam