உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் கீவ் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில், நள்ளிரவு கீவ் நகரில் ரஷ்யா சரமாரியாக வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆண்டுதோறும் மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கீவ் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தலைநகர் கீவில் நள்ளிரவு நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில், ஒருவர் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலின் போது ரஷ்யாவின் 20 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.