deepamnews
இந்தியா

தீபாவளி பண்டிகை காரணமாக சென்னையில் காற்று மாசுபாடு மேலும் அதிகரிப்பு.

தீபாவளி பண்டிகையை அடுத்து சென்னையின் பல இடங்களில் காற்று மாசு அதிகரித்தது. பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 100 ஐ தாண்டியது.

தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை பொலிஸ்  அறிவுறுத்தியிருந்தது.

தீபாவளி பண்டிகை தினத்தில், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும் என்று பொலிஸ் அறிவுறுத்தியிருந்தது. மேலும், காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அதே சமயம் நேற்று முன்தினம் காலை முதலே சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்பட்டுள்ளது. அரசின் விதிப்படி, குறிப்பிட்ட நேரங்களில் அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கியதை அடுத்து சென்னையில் காற்று மாசு மேலும் அதிகரித்தது. சென்னையின் அனைத்து இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியது. குறிப்பாக, சென்னை அசோக் நகர் ஸ்ரீதேவி காலனியில் -147, கொடுங்கையூர் பகுதியில் – 150 என்ற அளவை தாண்டிச் சென்றது. சென்னையின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். எனினும், ராயபுரம், அண்ணா சாலை போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் 100க்கும் குறைவாக இருந்தது.

இதேவேளை, தமிழகம் முழுவதும் நேராக கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த குற்றச்சாட்டில் 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என பொலிஸ்  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பொலிஸ்  தலைமை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவதும் 2,246 பேர் மீது பதிவு செய்யப்பட்டது. அதில் 2,095 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 558 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 2005 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் தெலுங்கு திரைப்படங்களை வெளியிட அனுமதிக்கமாட்டோம் – சீமான் எதிர்ப்பு

videodeepam

ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

videodeepam

தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களப்படையின் அத்துமீறல்கள் இந்தியாவுக்கு விடப்பட்ட சவால் – அன்புமணி ராமதாஸ் தெரிவிப்பு

videodeepam